SANTHOSH
'சூரியஒளி மின் உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்'
சூரியஒளி மின் உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என விவான் சோலார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் அஷீஷ் அகர்வால் தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை சூரியஒளி மின் உற்பத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் மின் உற்பத்தி செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். எனவே, அதற்கான ஒரே தீர்வு சூரியஒளி மின்சாரம் மட்டுமே. சூரியஒளி மின்சாரத்தை தொழில்சாலைகள், வீடுகளின் கூரைகளிலும் உற்பத்தி செய்ய முடியும். சூரிய ஒளியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கும் விற்பனை செய்ய முடியும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். அண்மையில் பெங்களூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ரயில்சக்கர தொழில்சாலையின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தியை செய்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை மற்ற தொழில்சாலைகள், தனியார் நிறுவனங்களும் பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

கருத்துகள்
கருத்துரையிடுக