ப்ளு வேல் விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவது எப்படி..! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…!!
ப்ளு வேல் விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவது எப்படி Blue Whale Game Challenge. ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
இந்த விளையாட்டை விளையாடுறவங்க பெரும்பாலும் குழந்தைங்கதான். இப்போ இளைஞர்களும் விளையாட ஆரம்பிச்சிட்டாங்க.
இது ஒரு 50 நாள் சேலஞ்சிங் விளையாட்டு
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு டாஸ்க் இந்த கேம் ஓனர்ட்ட இருந்து உங்களுக்கு வரும் அது என்ன மாதிரியானதுனா
உன் கையில பிளேடு வச்சி 3 தடவ கட் பண்ணிக்க அத என்னக்கு போட்டோ எடுத்து அனுப்பு.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து உன் வீட்டு மொட்டை மாடிக்கு போய் ஏதாவது ஒரு திகில் படம் பாத்து அத எனக்கு போட்டோ எடுத்து அனுப்பு என இந்த மாதிரியான டாஸ்க்குகள் கொடுக்கப்படும்
நீங்க கேட்கலாம் நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்
நா பண்ண மாட்டேன்னு அவன்கிட்ட சொல்லவும் முடியாது
நீங்க ஒரு தடவை இந்த கேமை லாகின் பண்ணிடீங்கனா உங்க மொபைலில் உள்ள அணைத்து விஷயங்களும் அவன் கைல போய்டும்.
நீங்க இதுவரை பார்த்த விஷயங்கள், பண்ணின விஷயங்கள் மற்றும் உங்கள் மொத்த கான்டாக்ட் லிஸ்டும் அவனுக்கு போய்டும்
சுருக்கமா சொல்லனும்னா உங்க மொபைல் இருக்கிறது உங்க கைல ஆனா மொத்த தகவலும் அவன்கிட்ட போய்டும் அப்புறம்…..
நா சொல்றத பண்ணலேனா நீ செய்த விஷயங்களை உன் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அனுப்பிடுவேன் அப்டின்னு பயம்புருத்துவான்
நீ பயப்படனும்னு கொஞ்ச தகவலை அனுப்பவும் செஞ்சிடுவான்
உங்க வீட்டுல இருந்து கேப்பாங்க
நீயும் அடுத்த விஷயம் வெளியே தெரிய கூடாதுனு அவன் சொல்றத வேறு வழி இல்லாமல் செய்ய தொடங்குவ
ஏன் இதை விளையாடனும். ஏன் இது இவ்ளோ கொடூராமா இருக்குனு தெரிஞ்சும் விளையாடுறாங்க?! இதற்கு விடை ரொம்ப சின்னது
1) தனிமை ல இருக்க விரும்பற எல்லோரும் ரொம்ப ஏங்கி போய் இப்படியான கேமை பார்த்ததும் அது மேல வர ஒரு விதமான ஈர்ப்பு, ஆர்வக்கோளாறு காரணமாக என்னதான் இருக்குனு பாத்துருவோம் உள்ள போய் உயிர விட்றது !!!
சரி இவங்க எல்லாரும் விரும்பி தான் இதலாம் செஞ்சு தற்கொலை பண்ணிக்கிறாங்களானா அதுவும் இல்ல .
அப்போ என்னதான் நடக்குது இங்க அப்டின்னு பாத்தா அந்த ப்ளு வேல்ஸ் கேமானது கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்களால நடத்தபட்டுட்டு இருக்கு.
அதுல 85% பேர் ஹேக்கர்ஸ்னு சொன்னா நம்ப மாடீங்க ஆமா இது நடந்துறவங்க எல்லாமே #phishing தெரிஞ்சவங்க அதாவது நல்லா ஹேக்கிங் படிச்சு திறமையானவர்கள். இந்த கேமை கண்டுபுடிச்சவர் அத அப்டியே இந்த ஹேக்கிங் குரூப் கிட்ட குடுத்துட்டான்.
சரி இப்போ இவன் என்ன செய்றான்னா அந்த ப்ளு வேல்ஸ் உள்ள போய் நீங்க பதிவு பண்ணதுமே உங்க அக்கவுன்ட் ஹேக் பண்ணிருவான். அது உங்க பேஸ்புக், மெயில் உள்பட எல்லாத்தையும் ஹேக் பண்ணிருவாங்க.
உங்க பேஸ்புக் பக்கத்தில் இருந்து சம்மந்தமே இல்லாம பதிவுகள் வரும். உங்கள அதுல அசிங்கப்படுத்துவாங்க. அது மூலமா உங்களுக்கு மனதளவில் டார்ச்சர் குடுப்பங்க.
உங்கள அத செஞ்சே தீரனும் னு நெருக்கடி தருவாங்க. மேலும் உங்க போன் நம்பர்க்கு அழைப்புகள் வட வரலாம்.
இவ்ளோ நெருக்கடிய பார்க்கும்போது நமக்கே நெனச்சிப்பாக்க பயமா இருக்கும்போது ஒன்னுமே தெரியாத சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க. இப்டிதான் பல உயிர எடுத்துருக்காங்க..
இதுக்கு தீர்வு ரொம்ப சிம்பிள். உங்க வீட்ல அல்லது தெரிஞ்ச சின்ன பசங்க யாரா இருந்தாலும் அவங்க அவங்கள அதிக நேரம் இன்டர்நெட்ல பிரவுசிங் பண்ண விடாதீங்க. அவங்க இன்டர்நெட்ல என்ன பாக்குறங்கன்னு செக் பண்ணிட்டே இருக்குறது நல்லது.
அவங்கள தனியா விட்றது நல்லது இல்ல… எக்காரணத்த கொண்டும் எவன் கேட்டாலும் அந்த லிங்கை தயவு செஞ்சி ஷேர் பண்ணாதீங்க
கருத்துகள்
கருத்துரையிடுக